Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியில் செல்போன் திருடும் சிறுவர்கள் - பொதுமக்கள் ஜாக்கிரதை

மார்ச் 21, 2021 09:11

திருச்சி:  மத்திய பேருந்து நிலையம் பகுதியில் நடந்து செல்வோரிடம் செல்போன் திருட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருச்சி மிளகு பறை கள்ளர் தெருவை சேர்ந்த  நவீன் என்ற இளைஞர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தனது வீட்டிற்கு   தனது செல்போனில் பேசிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.  இதனை அறிந்து அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இரு சிறுவர்கள் நவீனின் செல்போனை கண் இமைக்கும் நேரத்தில் பறித்து சென்று உள்ளனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் சிறுவர்களை பிடிக்க முயன்று துர்த்தியபோது எதிரே வந்த ஆட்டோவில் மோதி கீழே விழுந்து,

இருசக்கர வாகனத்தையும், செல்போனையும் கீழே போட்டு விட்டு மத்திய  பேருந்து  நிலையத்திற்குள் தப்பி சென்றனர். இது குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சியின் முக்கிய பகுதியான மத்திய பேருந்து நிலைய  பகுதியில் சிசி டிவி  கேமரா இல்லை என்பதால் இதே போல் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே அப்பகுதியில் சி.சி டிவி கேமரா அமைத்து  கொள்ளை சம்பவங்களை தடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்